அண்மைய செய்திகள்

recent
-

அமலமரித்தியாகிகள் சபையின் ஒத்துழைப்புடன் மாங்குளத்தில் 'மெத்தா' கிளை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த 23.03.2014 இருந்து 24.03.2014 ஆகிய இரு தினங்களில் மெத்தா நிறுவனம் தமது 53வது ஊனமுற்றவர்களுக்கான நடமாடும் சேவையை கிளிநொச்சி கருணைநிலையத்தில் நடாத்தியது.  இதில் மொத்தம் 38 பயனாளிகள் பயனடைந்தனர்.  இவர்களில் 26 ஆண்களும், 10 பெண்களும், 1 சிறுவன்,      1 சிறுமி போன்றோர் அடங்குவர்.

இதை தொடர்ந்து இவர்களின் 54வது நடமாடும் சேவை 25.03.2014, இருந்து 26.03.2014 ஆகிய இரு தினங்களில் கள்ளப்பாடு, முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவு சமாச கட்டடத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் 23 ஆண்கள்,      7 பெண்கள், 2 சிறுமிகளாக மொத்தம் 32 பயனாளிகள் பயனடைந்தனர்.

மேற்படி நடமாடும் சேவைகள் சம்பந்தமாக கருத்து தெரிவித்த இதன் தொடர்பு அதிகாரி  திரு. சின்கிளேயர் பீற்றர், ஊனமுற்றவர்களுக்கு இரு செயற்கை அவயவங்கள் இருப்பதுநலம். ஏனெனில் சிலசமயம் ஒன்று உடைந்துவிட்டால் அடுத்ததைப் பாவித்து தமதுபணியைத் தொடரலாம். ஆயினும் ஒரு சிலர் 3-4 செயற்கை அவயவங்கள் வைத்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் துரிதவளர்ச்சி அடைவதனால்         6 மாதத்துக்கு ஒரு தடைவ எம்மிடம் காண்பித்து புதிய அவயவங்களை அவர்களின் உயரம், பருமனுக்கேற்ப மாற்றப்படல் வேண்டும்.

இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் 5 ற்கு மேற்பட்ட ஸ்தாபனங்கள் எம்மைப் போன்று செயற்கை அவயவங்களை தயாரிப்பதனாலும ஒவ்வொரு ஸ்தாபனங்களும் வெவ்வேறு உதிரிப்பாகங்களைபாவிப்பதனால்  ஏனைய ஸ்தாபனங்கள் தயாரித்துவழங்கிய செயற்கை அவயவங்களை மெத்தாநிறுவனம் திருத்தமுடியாது. எனவே எமது சேவையை பெறவிரும்பும் நலன் விரும்பிகள் தாம் பாவித்த மெத்தா செயற்கை அவயவங்களை கொண்டுவருமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.

கடந்த 5 வருடங்களில் மன்னார் வைத்தியசாலையை தலைமை நிலையமாக கொண்டு இயங்கும் மெத்தாநிறுவனம் வடகிழக்கில் உள்ள 6000 க்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களின் நலன்கருதி தமது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

அமலமரித் தியாகிகளின் (ழுஆஐ) நிதிப் பங்களிப்பின் கீழ் மாங்குளம் யு-9 வீதியில் 'அமைதிதென்றல்'  எனும் கட்டடத்தில் வைகாசி மாதம் தொடக்கம் எமது கிளை அமைக்கப்பட உள்ளது.  இதில் திங்கள் தொடக்கம் சனிவரை ஊனமுற்றவர்கள் தமது தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ளலாம். குறிப்பாக யாழ், முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ளவர்களும்,  நெடுங்கேணி,  முழங்காவில் போன்ற எல்லை கிராமமக்களும் பயனடையமுடியும்.

மன்னார் வைத்தியசாலையில் அமைந்துள்ள கிளையில் மன்னார், வவுனியா மாவட்ட ஊனமுற்றோர் பயனடையமுடியும்.
இதேபோன்று  'மாகோ ' புகையிரதசந்தி;க்கு 1 கிலோமீற்றர் தூரத்தில்  பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளையில் புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலைநாட்டுபகுதி மக்களும் ஏனைய தெற்கு பகுதி மக்களும் பயனடையமுடியும்.


திரு. சின்கிலேயர் பீற்றர் 
மெத்தா தொடர்பு அதிகாரி, 
மெத்தா செயற்கை அவய நிறுவனம்
பொது வைத்தியசாலை. மன்னார்,
தொ. பே.    077-2131-652

அமலமரித்தியாகிகள் சபையின் ஒத்துழைப்புடன் மாங்குளத்தில் 'மெத்தா' கிளை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. Reviewed by NEWMANNAR on April 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.