13ம் திருத்தச் சட்டம் போதுமானதல்ல என மன்னார் ஆயர் குறிப்பிடுகின்றார்!– சிங்கள ஊடகம்
13ம் திருத்தச் சட்டம் போதுமானதல்ல என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் குறிப்பிடுகின்றார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க ஆதரவு நாடுகள் அண்மையில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.
எனினும், யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரையை நிராகரிப்பதாக மன்னார் ஆயரும் அரச சார்பற்ற நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் கிட்டாது என மன்னார் ஆயரும் அரச சார்பற்ற நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டம் போதுமானதல்ல என மன்னார் ஆயர் குறிப்பிடுகின்றார்!– சிங்கள ஊடகம்
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating:

No comments:
Post a Comment