22 ஆவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்த குழந்தை மரணம்
கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டடத்தின் 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்றிரவு 7.22 அளவில் குழந்தை மாடியிலிருந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்ப்படவுள்ளன.
22 ஆவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்த குழந்தை மரணம்
Reviewed by NEWMANNAR
on
January 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 25, 2015
Rating:


No comments:
Post a Comment