பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்
பச்சை குத்தியதை (Tatoos) வலியின்றி அழிக்கும் கிரீம் ஒன்றினை கனடா நாட்டின் டல்ஹவுஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. மாணவர் அலெக் பாகனகம் கண்டுபிடித்துள்ளார்.
பச்சை குத்தியவுடன், அந்த மையில் உள்ள வண்ணப்பொருள், நமது தோலுக்குள் சென்று சேர்ந்து விடும். பிறகு அது, ‘மேக்ரோபேஜஸ்’ என்ற வெள்ளை இரத்த அணுக்களால் ஈர்த்துக்கொள்ளப்படும்.
அந்த மாணவர் கண்டுபிடித்துள்ள கிரீம், வண்ணப்பொருளை ஈர்த்து வைத்துள்ள மேக்ரோபேஜசுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்டது.
இதனால், பச்சை வலியின்றி அழிந்து விடுவதாகத் தெரியவந்துள்ளது.
பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம்
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:


No comments:
Post a Comment