அண்மைய செய்திகள்

recent
-

தொடரைக் கைப்­பற்­றி­யது இலங்கை அணி


இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடை­யி­லான 3 போட்­டி­களைக் கொண்ட உத்­தி­யோ­பூர்­வ­மற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இரு அணி­க­ளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நடை­பெற்ற ஒரு நாள் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­டு­க­ளையும் இழந்து 277 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. 

துடுப்­பாட்­டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். கடந்த இரண்டு போட்­டி­க­ளிலும் சதம் அடித்­தி­ருந்த குசல் பெரேரா இப்­போட்­டியில் 13 ஓட்­டங்­களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவ­ற­விட்டார். 

இதன் மூலம் தொடர்ச்­சி­யாக மூன்­றா­வது சதம் வாய்ப்பு இல்­லாமல் போனது. இவரைத் தவிர, ஷெஹான் ஜய­சூ­ரிய 67 ஓட்­டங்­க­ளையும் , கித்­ருவன் வித்­தா­னகே 29 ஓட்­டங்­க­ளையும் அதி­க­பட்­ச­மாகப் பெற்­றுக்­கொ­டுத்­தனர். பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் ஏ அணி 48.1 ஓவர்­களில் 4 விக்­கெட்­டு­களை மாத்­திரம் இழந்து 281 ஓட்­டங்­களைப் பெற்று 6 விக்­கெட்­டு­களால் வெற்றி பெற்­றது. ஏற்­க­னவே நடை­பெற்ற 2 போட்­டி­க­ளிலும் இலங்கை ஏ அணி வெற்றிபெற்றதனால் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரை இலங்கை ஏ அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

தொடரைக் கைப்­பற்­றி­யது இலங்கை அணி Reviewed by Author on May 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.