புதிய ஆட்சி தமிழர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது : இல.கணேசன் தெரிவிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமானது தமிழர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் நிறைவேற்றுக்குழுஉறுப்பினர் இல.கணேசன் சிறந்த எதிர்காலம் காணப்படுவதாகவும் அதற்காக அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இல.கணேசன் பா.ஜ.கா.வின் தமிழ்நாட்டு பிராந்தியத்தியத்திற்கான பிரதி தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலே இல.கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீண்ட இடைவௌியின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை ஔிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது. கம்பன் கழக விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக நான் இங்கு தங்கியிருக்கின்றேன்.
பல்லவேறு தரப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடத்தியதுடன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடடியுமுள்ளேன். அதனடிப்படையிலே அவர்கள் புதிய அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கையான கருத்துக்களை வௌியிட்டிருக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எவ்வாறன நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றதோ அவை அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து முழுமையான பங்களிப்புகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது. குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் அக்கருத்தை தௌிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது எனக் கருதுகின்றேன். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒட்டுமொத்த இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும் என்றார்.
புதிய ஆட்சி தமிழர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது : இல.கணேசன் தெரிவிப்பு
Reviewed by Author
on
May 06, 2015
Rating:

No comments:
Post a Comment