மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின மாநாடு -2015-Photos
மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு இம்முறை -26-06-2015 இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் 56 மாநாடாக நடைபெற்றது. வடக்கு கிழக்கு குறிப்பாக ஆசிரியர்களும் அதிபர்களும் மிகவும் துன்பப்படுகின்ற மாவட்டமாக மன்னாரையும் பிரதேசமாக மடுவினையும் உள்வாங்கும் நோக்கில் இம்மாநாடு மன்னாரில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில்---
தலைவராக-பிரியந்த பெணாண்டோவும்
செயலாளராக-ஜோசப் ஸ்டாலினும்
பொருளாளராக-எச்-எம்-குணவர்த்தனவும்
ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு இம்மாநாட்டில் 85 கோரிக்கைகளும் 15சிந்தைகளும் செயல் திட்டங்களும் முன்வைக்கப்பட்டதோடு அதிபர் ஆசிரியர்கள் தொடர்பான யாப்பு கொள்கைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அதிபர்கள் ஆசிரியர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய முறையில் உடனுக்குடன் தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமும் இனிசெயலாற்றப்போகும் சேவையும் தேவையும் குறிக்கோளும் ஆகும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பாசிரியராக எல்.எம்.தர்மதாஸ் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இம்மாநாட்டில் இன-மத-மொழி பேதமின்றி இலங்கையின் சகலபாகங்களிலும் இருந்து ஆசிரியர்கள் அதிபர்கள் கல்விப்பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் முதற்தடவையாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின மாநாடு -2015-Photos
Reviewed by NEWMANNAR
on
June 27, 2015
Rating:
No comments:
Post a Comment