அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா.விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் வரை பிற்போடுங்கள் : அமெரிக்காவில் அமைச்சர் மங்கள கோரிக்கை


இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை அலு­வலகம் மேற்­கொண்ட விசா­ர­ணையின் அறிக்­கையை பல மாதங்­க­ளுக்கு பிற்­போட இலங்கை எதிர்­பார்ப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.
ஏ.பி. செய்தி சேவைக்கு அமெரிக்காவில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்த இரண்டு மாதங்­களில் உள்­ளக விசா­ரணை பொறி­முறை உரு­வாக்­கப்­படும் என்றும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன்­கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இந்­த­நி­லையில் பேர­வையின் அறிக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை பிற்­போ­டப்­ப­டு­மானால் அந்த நேரத்தில் உரு­வாக்­கப்­படும் தமது உள்­நாட்டு பொறி­மு­றை­யையும் பேரவை பரி­சீ­லிக்க முடியும் என்று மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவின் வொஸிங்­டனில் வைத்து இந்தகருத்தை அமைச்சர் மங்­கள சம­ர­வீர வெளி­யிட்­டுள்ளார். அமெ­ரிக்­கா­வுக்கு உத­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் சம­ர­வீர அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெர்­ரியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு முன்­ப­தாக இந்த கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இலங்­கையின் புதிய அர­சாங்கம் இந்த விட­யத்தை கையாள்­வ­தற்கு உள்­ளக பொறி­முறை ஒன்றை அமைக்கும் வரையில் இந்த அறிக்­கையை வெளி­யி­டக்­கூ­டாது என்று தமது நாடு எதிர்ப்­பார்ப்­ப­தாக அமைச்சர் கேட்டுக் கொண்­டுள்ளார்.

இந்­நி­லை­யி­லேயே குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்த இரண்டு மாதங்­களில் உள்­ளக விசா­ரணை பொறி­முறை உரு­வாக்­கப்­படும் என்றும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன்­கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

பேர­வையின் அறிக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை பிற்­போ­டப்­ப­டு­மானால் அந்த நேரத்தில் உரு­வாக்­கப்­படும் தமது உள்­நாட்டு பொறி­மு­றை­யையும் பேரவை பரி­சீ­லிக்க முடியும்.
எனவே ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இலங்­கையின் உள்­நாட்டு பொறி­முறை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அவ­கா­சத்தை பேரவை வழங்கும் என்று நாம் நம்புகிறோம்.

"முன்­னைய அர­சா­ங்கம் போன்று நாம் அனைத்­தையும் நிரா­க­ரிக்கும் போக்கை கொண்­டி­ருக்­க­வில்லை. எந்தக் குற்­றச்­சாட்டும் இடம்­பெ­ற­வில்லை என்றும் நாங்கள் கூற­வில்லை. குற்­றச்­சாட்­டுக்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்று நம்­பு­கின்றோம். ஆனால் இலங்கை மனித உரி­மை­கயை மீறி­ய­வர்கள் சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­டு­வார்கள் என்­ப­தனை நாங்கள் உறு­தி­ப­டுத்­து­கின்றோம். எமது பொறி­மு­றையின் ஊடாக இதனை செய்வோம்.

இதற்­காக ஐக்­கிய நாடுகள் மற்றும் பொது­ந­ல­வாய அமைப்பு ஆகி­ய­வற்­றிடம் இருந்து தொழில்­நுட்ப உத­வி­களை இலங்கை எதிர்­பார்க்­கின்­றது என்றார். இதே­வேளை மார்ச் 25ஆம் திகதி அறிக்­கையை வெளி­யிட அட்­ட­வ­ணையை தயா­ரித்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேச்­சாளர் ருபர்ட் கொல்­விலி ஏற்­க­னவே தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம்இ மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் கீழ் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் சர்­வ­தேச அறிக்­கையே எதிர்­வரும் மார்ச் 25ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் கால் நூற்றாண்டுகாலம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அதிகளவிலான சிவிலியன்கள் கொல்லப்படடிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் தரப்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் வரை பிற்போடுங்கள் : அமெரிக்காவில் அமைச்சர் மங்கள கோரிக்கை Reviewed by Author on June 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.