இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு

இலங்கை, கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து 2.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டொக்கொம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஸ்யாவில் இருந்தே அதிக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆசிய வலயத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளன.
அமெரிக்காவை பொறுத்தவரையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் பிரதான விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆயுத விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை கடந்த சில வருடங்களில் 2.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது.
பங்களாதேஸ் 4.4பில்லியன் டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. இந்தியா 113 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது.
இதேவேளை இலங்கை, கடந்த சில வருடங்களில் சீனாவில் இருந்து 0.7பில்லியன் டொலர், இஸ்ரேலில் இருந்து 0.5பில்லியன், யுக்ரெய்னில் இருந்து 0.2 பில்லியன் டொலர்கள், ரஸ்யாவிடம் இருந்து 0.2 பில்லியன், அமெரிக்காவிடம் இருந்து 0.4 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக நிறுவகம் தெரிவித்துள்ளது.
இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment