கிளிநொச்சியில் போட்டியிடுமாறு பிரஜைகள் முன்னணிக்கு அழைப்பு
திர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் சந்திப்பொன்று நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சியின் பல பொது அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராம அபிவிருத்தி மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தக அமைப்பு, கமக்கார அமைப்பு, மகளிர் அமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு என்பன இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்காவிற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி அங்கு சென்ற பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.
அதன்போது பிரஜைகள் முன்னணியை கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுமாறு அந்த அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஏனைய மக்களுடன் கலந்துரையாடிவிட்டு அரசியல் விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு இதன்போது பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சியில் போட்டியிடுமாறு பிரஜைகள் முன்னணிக்கு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 10, 2015
Rating:


No comments:
Post a Comment