அண்மைய செய்திகள்

recent
-

வன்னித் தேர்தல் களம்: 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் போட்டி! இரு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இன்று திங்கட்கிழமை நண்பகலுடன் நிறைவுக்கு வந்த வேட்பு மனுத் தாக்கலின் போது வன்னித் தேர்தல் தொகுதிக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.

இதன்படி – செத பெரமுன, மக்கள் விடுதலை முன்னனி, முன்னிலை சோசலிசக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா மக்கள் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி, பிரஜைகள் முன்னனி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னனி, ஐக்கிய மக்கள் கட்சி, ஜனநாயக ஐக்கிய முன்னனி, ஐக்கிய சமாதான முன்னனி, மௌபீப ஜனதா பட்சய ஆகிய கட்சிகளும் 10 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன.

இதேவேளை – நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக வன்னித் தேர்தல் தொகுதியில் விண்ணப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பந்துலஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். நவசிஹல உறுமய கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஒன்றினுடைய வேட்புமனுக்கள் ஆகியனவே நிராகரிக்கப்படுள்ளதாக தெரியவருகிறது.
வன்னித் தேர்தல் களம்: 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் போட்டி! இரு வேட்புமனுக்கள் நிராகரிப்பு Reviewed by NEWMANNAR on July 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.