அண்மைய செய்திகள்

recent
-

யாழ். தேர்தல் மாவட்­டத்தில் விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை...


யாழ். தேர்தல் மாவட்­டத்தில் விருப்பு வாக்கு எண்­ணும்­போது கால தாமதம் ஏற்­ப­ட­வில்லை. விருப்பு வாக்கு கணக்­கெ­டுப்பு உரிய முறையில் உரிய நேரத்­தி­லேயே நடை­பெற்­ற­தாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எம்.பி.ஈ. சர­வ­ண­பவன் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், யாழ். தேர்தல் மாவட்­டத்தில் கட்­சி­களின் வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கை­யின் ­போதே காலதாமதம் ஏற்­பட்­டது. கட்­சி­களின் வாக்­கெண்ணும் நட­வ­டிக்­கையில் ஏற்­பட்ட தாம­தமே விருப்பு வாக்கு முடி­வு­களை அறி­விப்­பதில் கால தாம­தத்தை எற்­ப­டுத்­தி­யது. எனவே விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கை­யின்­போது கால தாமதம் ஏற்­பட்­ட­தாக சிலர் குறிப்­பி­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை.

விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்கை ஒரு­முறை மாத்­தி­ரமே நடை­பெற்­றது. மீள்­க­ணக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். மேலும் விருப்பு வாக்கு முடி­வு­களில் எந்த ஒரு அபேட்­ச­கரும் அதி­ருப்தி தெரி­விக்­க­வு­மில்லை.

எனவே விருப்பு வாக்­கு­களின் கணக்­கெ­டுப்பு சகல தொகு­தி­க­ளிலும் நிறை­வுற்ற பின்னர் தேர்தல் திணைக்­களம் வெற்­றி­பெற்­ற­வர்­களின் விப­ரத்தை வெளியிட்டது. அதன் பிரகாரமே தான் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். தேர்தல் மாவட்­டத்தில் விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை... Reviewed by Author on August 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.