அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 233 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி...


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இம்முறை வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப்பெற்று 233 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் த.சுகுமாரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை மட்டக்களப்பு கல்வி வலயம் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளது. 90 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தினைப் பொறுத்தவரையில் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் 207 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 50 மாணவர்களும் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 39 மாணவர்களும் புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 34 மாணவர்களும், புனித மைக்கேல் கல்லூரியில் 31 மாணவர்களும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 16 மாணவர்களும் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் 08 மாணவர்களும் சிவானந்தா தேசிய பாடசாலையில் 08 மாணவர்களும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 07 மாணவர்களும், மகாஜனக்கல்லூரியில் 06 மாணவர்களும் சித்திபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 233 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி... Reviewed by Author on October 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.