தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-படம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து படகு ஒன்றில் வருகை தந்த 4 தமிழக மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரினால் குறித்த 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
-இவர்கள் உடனடியாக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(22) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் குறித்த மீனவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
-இதன் போது அங்கு வருகை தந்தை இந்திய துனைத்தூதரக அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிடதோடு அவர்களிடம் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.
-பின் குறித்த மீனவர்கள் இன்று(22) செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த 4 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-படம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 22, 2015
Rating:
No comments:
Post a Comment