அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி-23-01-2016 முழுமையான படங்களுடன்



மன்னார் மாவட்டபொதுவைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி இன்று காலை 8-30 மணியளவில் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஆரம்பமானது மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லமும் மனனார் பொதுவைத்தியசாலையும் செஞ்சிலுவைச்சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சிரமதானப்பணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முப்படையினரும் ஒவ்வொரு மறைப்பங்கின் மக்கள் பொதுநிலையினர் மருத்துவ ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்கள் அரசமற்றும் அரச சார்பற்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என 1000 மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவைத்திய சாலையில் 23 ஏக்கர் பரப்பளவான காணிப்பகுதியை 25 பிரவுகளாக பிரித்து சகலரும் சிரமதானப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இச்செயற்பாடனது காடாய் கிடக்கின்ற பொதுவைத்திய சாலைப்பகுதியானது துப்பரவாகவும் நுளம்புப்பெருக்கமற்ற தூய்மையான துப்பரவான பொதுவைத்தியசாலையாக மாற்றம் பெறுகின்றது. இங்கு அகற்றப்படும் குப்பபைகளை கூழங்களை ஏற்றுவதற்காக நகர சபையின் உழவு இயந்திரங்கள் வாகனங்கடோடு பொது நிலையினரின் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நல்லதொரு நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வடக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மருத்துவர்கள் உயர் அதிகாரிகள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பொது நிலையினர் என அனைவரும் கலந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.













































மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி-23-01-2016 முழுமையான படங்களுடன் Reviewed by Author on January 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.