அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் தீர்வு விடயத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடக்கூடாது : திஸ்ஸ விதா­ரண


அர­சியல் தீர்வு விட­யத்தில் இன­வா­தத்­திற்கு சந்­தர்ப்பம் அளித்து தமிழ் மக்­களை மீண்டும் அர­சாங்கம் ஏமாற்றி விடக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வெற்­றி­கொள்­வதும் காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது என்று முன்னாள் அமைச்­சரும் லங்கா சம­ச­மாஜ கட்­சியின் பொது செய­லா­ள­ரு­மான போரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்­கான முன்­னெ­டுப்­புகள் நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு பங்­க­ளிப்பு செய்யும் என நம்­பிக்கை வைக்க முடி­ய­வில்லை. பொரு­ளா­தார அபி­வி­ருத்­திகள் படு­பா­தா­ளத்தில் விழுந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இது குறித்த அவர் மேலும் தெரி­விக்­கையில்;

அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்ள கூடிய தேசிய தீர்வு திட்டம் ஒன்றே தற்­போது நாட்­டிற்கு தேவைப்­ப­டு­கின்­றது. அதனை நோக்கி கடந்­த­கால நகர்­வுகள் காணப்­பட்­டன. ஆனால் இன்று அவ்­வாறு இல்லை. நிலைமை பின்­தங்­கி­ய­தா­கவே உள்­ளது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்­ற­ம­டையும் நிலையே உரு­வெ­டுத்­துள்­ளது. தற்­போ­தைய அர­சாங்கம் அபி­வி­ருத்தி மற்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் என கூறி உண்­மை­யான விட­யங்­களை காலம் கடத்தி வரு­கின்­றது .

கடந்த அர­சாங்கம் அர­சியல் தீர்வு விட­யத்தில் குறிப்­பிட்­ட­ளவு இலக்­கு­களை அடைந்­தி­ருந்­தது. ஆனால் தற்­போது அந்த முன்­னேற்­றங்கள் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளன. மக்­களை ஏமாற்றும் நோக்­கமே தற்­போ­தைய அர­சாங்­கத்தின் உள்­ள­டக்­க­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அந்த நிலை மாற்­ற­ம­டைய வேண்டும். சர்­வக்­கட்சி குழு அன்று பல்­வேறு பரிந்­து­ரை­களை தேசிய பிரச்­சி­னையை மையப்­ப­டுத்தி முன்­வைத்­தது.

எனவே இந்த விட­யங்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். இன­வாதம் மற்றும் இன்­னோ­ரன்ன கார­ணங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்து தமிழ் மக்கள் ஏமாற்­றப்­ப­டு­வார்­க­ளோ­யானால் மீண்டும் யுத்த சூழ­லுக்கே வித்­தி­டு­வ­தாக அது அமைந்து விடும்.

தற்­போ­தைய அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான முன்­னெ­டுப்­புகள் கூட நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு உத­வுமா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. வெளிப்­ப­டைத்­தன்மை இந்த விட­யத்தில் மிகவும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும்.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பணிகள் இன்று ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளன. நல்­லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவ திட்டம் கூட திருத்தங்களுக்கு உள்ளாக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே நாட்டில் தற்போது காணப்படும் நிலை ஏற்புடையதல்ல. இந்த 2016 புதிய ஆண்டிலாவது அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்றார்.

அரசியல் தீர்வு விடயத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடக்கூடாது : திஸ்ஸ விதா­ரண Reviewed by Author on January 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.