பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் தொடரும் கல்விசார் சேவைகள்-Photos
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைதலைவருமான கெளரவ.இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் நேற்று (31.12.2015) வெள்ளாங்குளப்பகுதியிலுள்ள சேவா லங்கா, இந்தியன் வீட்டுத்திட்டம் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 85 மாணவர்களுக்கு பாடத்திட்டங்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை தனது சொந்த நிதியின் மூலம் வழங்கினார்.
அவ் நிகழ்வில் கெளரவ. பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் பின் தள்ளப்பட்ட கிராமங்களில் வாழ்கின்ற மாணவர்கள் கல்வியில் தன்நிறைவு பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்றும் அதற்காக தனது சேவையானது வறிய கிராமங்களில் கல்வியின் மேம்பாட்டிற்க்கு தொடரும் என கூறினார்.
மேலும் கெளரவ. பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் சேவைகளில் கல்விசார் கேவைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் தொடரும் கல்விசார் சேவைகள்-Photos
Reviewed by Admin
on
January 01, 2016
Rating:
Reviewed by Admin
on
January 01, 2016
Rating:




No comments:
Post a Comment