அண்மைய செய்திகள்

recent
-

பத்து மாதங்களில் 407 படுகொலைகள்! 1,078 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 10 மாதங்களில் 407 கொலைகளும், ஆயிரத்து 78 பாலியல் வல்லுறவு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமும் ஒழுங்கும் அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

படுகொலைகள், கற்பழிப்பு, ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் கேள்விவொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் அமைச்சு பதில் வழங்கிய போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாட்டில் 473 கொலைகள், ஆயிரத்து 75 பாலியல் வல்லுறவுகள், 245 ஆட்கடத்தல்கள், 25 கப்பம் கோறல்கள், 3 ஆயிரத்து 554 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கும் 2015ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 407 கொலைகள், ஆயிரத்து 78 பாலியல் வல்லுறவுகள், 208 கடத்தல்கள், 27 கப்பல் கோரல்கள், 3 ஆயிரத்து 259 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மாதங்களில் 407 படுகொலைகள்! 1,078 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. Reviewed by Author on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.