அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் சுதந்திர தினம் கிளிநொச்சியில் துக்கதினமாக அனுஸ்டிப்பு!

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை துக்கதினமாக காணமல்போனோரின் உறவுகள் கிளிநொச்சியில் கடைப்பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை தொடக்கம் காணாமல் போனோரின் உறவுகள் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறும், அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறும், பெரும் சத்தமிட்டு காணாமல் போன தம்பிள்ளைகளின் நிலையை எண்ணி மிகவும் துயரமடைந்த நிலையில் கதறி அழுது தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

சுதந்திரக்காற்றை வெறுமனே ஒரு நாட்டினுடைய பெரும்பான்மையினத்தவர் மட்டும் சுவாசிப்பதில்லை.



அந்த நாட்டிலே வாழக்கூடிய அனைத்து இன மக்களும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் முற்று முழுதாக அந்த உரிமைகள் மறுக்கப்பட்ட நிலை கடந்த 68 வருடங்களாக சுதந்திரத்துக்காக ஏங்கி நிற்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் எவ்வாறு இந்த நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாட முடியும்.

அத்தோடு இதுவரை சரணடைந்ந எம் பிள்ளை களின் நிலை என்ன? எம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களை கொன்று குவித்த ஒரு நாட்டின் சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் என இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.



கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் காணமல்போனோரின் உறவினர்களின் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியதோடு, போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இதே வேளை இம்மக்களின் அமைதியான போராட்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக கண்காணித்தபடி புலனாய்வாளர்கள் இருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.


இலங்கையின் சுதந்திர தினம் கிளிநொச்சியில் துக்கதினமாக அனுஸ்டிப்பு! Reviewed by NEWMANNAR on February 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.