தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் இன்று(27) புதன் கிழமை அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இன்று புதன் கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
மேலும் குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 21 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
-இதன் போது கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 21 இந்திய மீனவர்களையும் கைது செய்து இன்று புதன் கிழமை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின்னர் இன்று புதன் கிழமை மாலை 7 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு,மேலும் வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
மன்னார் நிருபர்
(27-04-2016)
மேலும் குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 21 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
-இதன் போது கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 21 இந்திய மீனவர்களையும் கைது செய்து இன்று புதன் கிழமை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின்னர் இன்று புதன் கிழமை மாலை 7 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு,மேலும் வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
மன்னார் நிருபர்
(27-04-2016)
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:
No comments:
Post a Comment