-இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (28) உத்தரவிட்டார்.
-கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 13 மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை(28) விசாரனைக்காக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே மன்னார் நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடந்த மே மாதம் 5 ஆம் திகதி 6 மீனவர்களும், 9ஆம் திகதி 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆவது தடவையாக குறித்த மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment