வட மாகாணத்துடன், உறவை விருத்தி செய்துக்கொள்ள விரும்பும் சீனா!
இலங்கையின் வடக்கு மாகாணத்துடன் தொடர்புகளை விருத்திசெய்துக்கொள்ள சீனாவின் தூதுவர் ஆர்வம் கொண்டுள்ளதாக சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது
சீனாவின் தூதுவர் கடந்த நான்கு நாட்களாக வடக்கில் விஜயத் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையிலேயே தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பதில் தூதுவர், இ சியாங்லியாங் உறுதியாக இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு மாகாணம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் சமாதானத்தையும் இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள சீனா தயாராக இருக்கிறது.
இதனடிப்படையில், சீனாவின் முதலீட்டாளர்கள் வடக்கில் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வடக்குக்கான தமது விஜயத்தின்போது தூதுவர் 1 மில்லியன் ரூபாய்க்கான நூல்களை யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியுள்ளார்
அத்துடன், வடக்கின் 10 மாணவர்களுக்கு சீனாவின் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கும் வாய்ப்புக்களை தூதுவர் அறிவித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்துடன், உறவை விருத்தி செய்துக்கொள்ள விரும்பும் சீனா!
Reviewed by Author
on
June 18, 2016
Rating:

No comments:
Post a Comment