அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் போதை அற்ற நாட்டை உருவாக்குவோம்...


கிளிநொச்சியில் “போதை அற்ற நாட்டை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று நடை பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று காலை பத்து மணியளவில் கரச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வை கரச்சி பிரதேச செயலாளர் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

இதில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி எஸ்.ஆனந்தராஜாவும், வளவாளர்களாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் , உளவளத்துணை உத்தியோகத்தர் ,சட்ட உதவிஆணைக்குழு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்தோடு சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்பட்டவர்கள், கிராம சேவையாளர்கள் ,கிளிநொச்சி மாவட்ட சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் போதை அற்ற நாட்டை உருவாக்குவோம்... Reviewed by Author on June 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.