கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சமாதான நீதவான் பதவி....
இலங்கையின் கலைத்துறையை ஊக்குவிக்க சினிமாத்துறை, நாடகத்துறை கலைஞர்கள், பாடகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சமூகத்தின் முக்கிய பங்காளிகளான ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு சமாதான நீதவான பதவிகள்வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது சேவைகளை பாராட்டும் முகமாகவும், இவர்களது சேவைகளை ஊக்குவிக்கவும் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பதவி வழங்கும் நிகழ்வானது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தலைமையில் நாளை மறுதினம் (12) காலை 10.00 மணியளவில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சமாதான நீதவான் பதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் 100 பேர் கலந்து கொள்வர் எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன் இரண்டாம் கட்டமாக விளையாட்டுத்துறை மூலம் தேசிய அளவில்இலங்கைக்கு புகழ் தேடிக் கொடுத்த தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், விளையாட்டுத்துறை பராமறிப்பாளர்கள் ஆகியோருக்கும் சமாதான நீதவான் பதவி வழங்குதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சமாதான நீதவான் பதவி....
Reviewed by Author
on
June 10, 2016
Rating:

No comments:
Post a Comment