வடக்கில் கல்வி வீழ்ச்சியடைய காரணம்.....யுத்த பாதிப்பே!
யுத்தத்தின் தாக்கமே வடக்கில் கல்வி பெறுபேறுகள் வீழ்ச்சியடைய காரணம் என வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்கமானது இன்னும் 15 வருடங்களுக்கு தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் இன்று ஜப்பானிய தூதுவரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் குருத்து தெரிவித்த அவர்,
வடக்கில் கல்வி வீதம் குறைவடைந்து வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளே இதற்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய மக்களினதும், ஜப்பான் - இலங்கை நட்புறவின் அடையாளமாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பாடசாலையின் மூலம் மாணவர்களுக்கான பாடசாலை கல்வியினை மேம்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
வடக்கில் கல்வி வீழ்ச்சியடைய காரணம்.....யுத்த பாதிப்பே!
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment