காதலித்ததால் ஆத்திரம்! தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்...
இந்தியாவில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தங்கையை அண்ணன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மொகமது நயீம், இவர் தனது தங்கையான ஷப்னத்திற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.
ஆனால் அவரது தங்கை ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
இது வெளியில் தெரிந்தால் குடும்பம் மானம் கெட்டு விடும் என அறிந்த மொகமது நயீம், தங்கையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தொழுகை முடிந்து வீடு திரும்பிய மொகமது நயீம், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஷப்னத்தை நோக்கி சுட்டுள்ளார்.
பாய்ந்து வந்த குண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த உலோக அணிகலன் மீதுபட்டது, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, துப்பாக்கி குண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த உலோக அணிகலன் மீது பட்டதால் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை, விரைவில் குணமாகி விடும். அவருக்கு நினைவு திரும்பிய பிறகு அவர் அளிக்கும் வாக்குமூலம் மூலமாகவே குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறியுள்ளனர்.
இருப்பினும் ஷப்னம் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்ததால் ஆத்திரம்! தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்...
Reviewed by Author
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment