அண்மைய செய்திகள்

recent
-

ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் மன்னார் பண்டிவிரிச்சான்அ மைதிப்புரம் கிராம மக்கள்!

மன்னார் பண்டிவிரிச்சான் அமைதிப்புரம் கிராமத்தில் ஒருவேளை உணவுக்கு கூட மக்கள் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள மக்கள், 47 வீடுகளில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர்

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பலர் போரில் கணவர்மாரை இழந்த பெண்களாவர்.

பலர், போரினால் தமது அவையவங்களை இழந்தவர்களாக உள்ளனர்.

எனவே போரின் பின்னரும் போராட்டம் மிக்க வாழ்க்கை ஒன்றை தாம் வாழ்வதாக இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி வசதி, குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதி என்ற குறைப்பாடுகளுடன் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லை என்று மக்கள் முறையிட்டுள்ளனர்.

இந்தநிலையில் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை வழங்கிய அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பின்னர் தமது கிராமத்துக்கு வருகைத்தர மறுக்கின்றனர் என்று அமைதிப்புர மக்கள் ஊடகங்களிடம் முறையிட்டுள்ளனர்.
ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் மன்னார் பண்டிவிரிச்சான்அ மைதிப்புரம் கிராம மக்கள்! Reviewed by NEWMANNAR on July 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.