அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கை அகதிகள்....


தமிழகத்தில் இருந்து தொடர்ந்தும் அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி பலர், இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

சுமார் 76 பேர் கொண்ட குறித்த அகதிகள் குழுவில் 41 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள், வவுனியா, மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றும் பல அகதிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கை அகதிகள்.... Reviewed by Author on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.