இலங்கைக்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்..! காரணம் என்ன..?
அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் சோவுல் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரியாவிலுள்ள இலங்கையர்களின் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் பேஸ்புக் ஊடாக விடுத்திருந்த அறிவிப்பின் பிரகாரமே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள எழுத்துக்களால் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகார்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்..! காரணம் என்ன..?
Reviewed by Author
on
November 14, 2016
Rating:

No comments:
Post a Comment