அண்மைய செய்திகள்

recent
-

'படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது' அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி....


“படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது” என 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பிடித்த மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.

இதில் கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் தமது வெற்றி குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், கல்வி கற்கும் மாணவர்களுக்கு சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
“பாடசாலையில் கொடுக்கும் பாடங்களை சரியான முறையில் செய்ய வேண்டும், படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது, ஆகவே நன்றாக படிக்க வேண்டும், ஆசிரியர் சொற்படி நடக்க வேண்டும், இவற்றை சரியாக செய்தால் வெற்றி பெற முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த மாணவிக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் வாழ்த்துக்கள் கூறியதுடன், பாடசாலையில் அனைவரும் மிக மகிழ்ச்சியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


'படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது' அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி.... Reviewed by Author on March 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.