12 வது நாளாக தொடரும் போராட்டம் -முள்ளிக்குளம் கிராமம் அரச காணியென்கிறது கடற்படை!
மன்னார் – முள்ளிக்குளம் கிராமம் அரசிற்கே சொந்தமானதென இலங்கை அரசு நீண்ட இடைவெளியின் பின்னராக கண்டுபிடித்துள்ளது.முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே, அந்த கிராமம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என கடற்படை பேச்சாளர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்கள்; கிராம நுழைவாயிலில் போராடிவருகின்றனர்.
இந்நிலையினிலேயே குறித்த காணிகள் அரசிற்கு சொந்தமானதென கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநருக்கும் முள்ளிக்குளத்தினில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களு டைய பிரதிநிதிகளுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஆளுநர் ஜனாதிபதியுடன் பேசுவதாக உறுதியளித்துள்ள நிலையினில் கடற்படையினரது இவ்வறிவிப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்கள்; கிராம நுழைவாயிலில் போராடிவருகின்றனர்.
இந்நிலையினிலேயே குறித்த காணிகள் அரசிற்கு சொந்தமானதென கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநருக்கும் முள்ளிக்குளத்தினில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களு டைய பிரதிநிதிகளுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஆளுநர் ஜனாதிபதியுடன் பேசுவதாக உறுதியளித்துள்ள நிலையினில் கடற்படையினரது இவ்வறிவிப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
12 வது நாளாக தொடரும் போராட்டம் -முள்ளிக்குளம் கிராமம் அரச காணியென்கிறது கடற்படை!
Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:

No comments:
Post a Comment