இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டுப் போட்டி கேரளாவில்!
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டுப் போட்டி கேரளாவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு, கேரளாவின் ஓட்ட வீராங்கனை மேர்ஸி குட்டன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில், கேரள மானிலத்தின் ஓரிரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் இருந்து சுமார் 200 போட்டியாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 100 X 4 மீற்றர் அஞ்சலோட்டம் என்பனவற்றுடன் குண்டெறிதல், நீளம் பாய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்குபெறவுள்ள திருநங்கைகளுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக விசேட பயிற்சிகளும் எதிர்வரும் 25ம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த திருநங்கையொருவர், தான் தனது பதினைந்தாவது வயது வரை ஓட்டப் போட்டியில் பல பரிசுகள் பெற்றிருப்பதாகவும், திருநங்கையாக மாறிய பின் சமூக அழுத்தங்களால் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும், பல வருடங்கள் கழித்து மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டுப் போட்டி கேரளாவில்!
Reviewed by Author
on
April 23, 2017
Rating:

No comments:
Post a Comment