மன்னார் - முள்ளிக்குள மக்கள் போராட்ட களத்தில் மாவை சேனாதிராஜா
இன்று (31/03/2017 ) 9வது நாளாக நில மீட்ப்புக்காக போராடிவரும் முள்ளிக்குள மக்கள் >
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் 9 ஆவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் இடம் பெற்ற நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று சந்தித்தனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சிவமோகன்,சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாரூக் ஆகியோர் முள்ளிக்குளம் சென்று சென்று 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்தித்து உரையாடினர்.
மன்னார் - முள்ளிக்குள மக்கள் போராட்ட களத்தில் மாவை சேனாதிராஜா
Reviewed by NEWMANNAR
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment