சுவீடனுக்காக அணைந்த ஈபிள் கோபுரம்....
சுவீடனில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
சுவீடன் தலைநகரான Stockholm நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இடையில் லொறி ஒன்று திடீரென நுழைந்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாரிஸ் மேயர் Anne Hidalgo டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சுவீடன் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நள்ளிரவு அணைக்கப்பட்டும் என அறிவித்தார். அதன் படி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.
சுவீடனுக்காக அணைந்த ஈபிள் கோபுரம்....
Reviewed by Author
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment