80வது நாளாக தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தீர்வின்றி 80வது நாளாக இன்றும்(10) தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இத் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வுகளுமின்றி இன்றளவிலும் இரவு, பகலாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
80வது நாளாக தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்
Reviewed by Author
on
May 10, 2017
Rating:

No comments:
Post a Comment