வடக்கு சுகாதார அமைச்சர் - வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சந்திப்பு...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை, வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இது தொடர்பான சந்திப்பு அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, வவுனியாவில் 399 பட்டதாரிகள் வேலைவாய்பின்றி இருப்பதாகவும் தமது போராட்டம் 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மாகாண சபையின் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல்,
பட்டதாரிகளை போட்டிப்பரீட்சை நடாத்தி நியமனம் வழங்குவதை நிறுத்த வேண்டும்,
மூப்பு அடிப்படையில் பல்கலைகழகத்தை விட்டு வெளியேறிய ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவரை தாங்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மாகாணத்தில் நீடித்து நிலைக்ககூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலமே பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை காணமுடியும்.
மாகாண சபைக்கு நியமனங்கள் வழங்கும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தனது அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் இருப்பதாகவும், இது தொடர்பில் இதுவரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எதிக்கட்சி தலைவருடன் பேசி சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் மாகாண அமைச்சர் உறுதியளித்தார்.
இதேவேளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பிற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு சுகாதார அமைச்சர் - வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சந்திப்பு...
Reviewed by Author
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment