கடற்பிரதேசங்களில் கடும் காற்று...... மன்னார் ஊடாக..... வானிலை மையம் தெரிவிப்பு"
நாட்டின் மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக கடல் கொந்தளிப்பு காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வானிலை அவதான நிலையம் நேற்று பிற்பகல் வௌயிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பிரதேசங்களில் மணிக்கு சுமார் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை காற்று அதிகரித்து வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பிரதேசங்களில் கடும் காற்று...... மன்னார் ஊடாக..... வானிலை மையம் தெரிவிப்பு"
Reviewed by Author
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment