அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் வேண்டாம் என்றால் அதுவே எமக்குப் பங்கமாகும்....


அரசியல் என்பது இன்று  பலராலும் விரும் பப்படாத ஒன்றாகிவிட்டது. இதற்கு மூலகார ணம் அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் செய்த அநீதிகளும் ஊழல்களும் மோசடி களும்தான்.

அரசியல் என்றாலே அது ஆபத்து. ஆகை யால் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வோம் என்ற முடிவுக்கு மக்கள் வருகின்றனர். இங்கு தான் மக்கள் மாபெரும் தவறு விடுகின்றனர்.
அதாவது அரசியலில் இருந்து ஒதுங்கு வது என்ற மக்களின் முடிவு பிழையானவர் கள் அரசியல் பதவிகளில் வந்துவிடுவதற்கு வழி செய்கின்றது.

தேர்தலில் வாக்களிப்பது ஒரு நாள். அதற் கான தேர்தல் பிரசாரங்கள் நடப்பது ஒரு மாதம். இந்தக் காலப்பகுதிக்குள் மக்கள் அரசியலை கடுமையாக வெறுக்கின்றனர்.
இந்த வெறுப்பின் விளைவு வாக்களிப்ப தில்லை என்பதாக இருக்கின்றது. பெரும் பகுதியான மக்கள் வாக்களிக்காமல் ஒரு பகுதி மக்கள் மட்டுமே வாக்களித்தாலும் ஜனநாய கத்தின் பெயரால் அரசும் ஆளும் தரப்பும் அறி விக்கப்படும்.

எனவே அரசியலை வெறுத்து தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டாலும் அது எந்த வகையிலும் அரசியலைப் பாதிக்கா தென்பது உணர்தற்குரியது.
சிலவேளை நாமும் அரசியல்வாதிகளும் திருந்தி ஒட்டுமொத்த வாக்காளர் தொகையில் குறைந்தது அறுபது வீதமானவர்கள் வாக் களிக்கத் தவறினால் அந்தத் தேர்தல் இரத் துச் செய்யப்படும் என்றொரு சட்டமூலத்தைக் கொண்டுவந்தாலேயன்றி வேறு எந்தவகை யிலும் பெரும் பகுதியினர் வாக்களிக்காவிட் டாலும் அது அரசியலை, தேர்தலை பாதிக்கா தென்பதுதான் நியதி.

எனவே அரசியலில் இருந்து ஒதுங்குதல் என்ற மக்களின் முடிவு மிகவும் தவறானது.
உண்மையில் அரசியல்வாதிகளை நாம் திருத்த வேண்டுமாக இருந்தால், அரசியல் தொடர்பில் ஒட்டுமொத்த மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
மக்களின் விழிப்பும் அவதானமும்; நேர்மை யான - மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய அரசியல் தலைவர்களை அதிகார பீடத்தில் இருத்தும். அவ்வாறு இருத்தும்போது நல்லது நடக்கும்.
ஆனால் நாம் அரசியலில் இருந்து ஒதுங்கி விட, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி அதி காரம் தேர்தலில் வென்றவர்களிடம் சென்று விடுகிறது.
ஒரு குறிப்பிட்ட மக்கள் வாக்களித்து அந்த  வாக்குகளின் அடிப்படையில் அரசு அமைப் போர் எல்லாக் குழப்பங்களையும் செய்வர்.

ஆகையால், அரசியலே எங்களை ஆளப் போகிறது. அரசியலே எங்கள் பொருளாதார சமூக கட்டுமானங்களை தீர்மானிக்கப் போகிறது. எங்கள் எதிர்கால வாழ்வும் வளமும் அரசிய லிலேயே தங்கியுள்ளது.
ஆகையால் அரசியலில் இருந்து ஒதுங்கு தல் என்ற முடிவைக் கைவிட்டு அரசியலை அறிந்து அதற்கேற்றாற்போல் செயற்படுதல் என்ற முடிவை மக்கள் எடுத்தால்,
அரசியலும் ஞானம் நிறைந்த துறையாக மாறும்.
valampuri


அரசியல் வேண்டாம் என்றால் அதுவே எமக்குப் பங்கமாகும்.... Reviewed by Author on January 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.