இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராக K.யசோதரனும் தேசிய சம்மேளன பிரதிநிதியாக J.நயனும் தெரிவு
வருடா வருடம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய ரீதியாக நடைபெறும் வேலை திட்டங்களில் கலந்து கொள்ளவும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியான இளைஞர் கழக செயட்பாடுகளில் கழகங்களை ஒன்றிணைத்து தேசிய ரீதியில் கழகங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இவ் தெரிவானது ஒவ்வொரு வருடமும் இடம் பெறுகின்றது அந்த வகையில் 2018வருடத்துக்கான தேசிய சம்மேளன தெரிவானது அன்று (11.12.2017) காலை 10.30 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு .பூலோகராஜா தலைமையில் பெற்றது மேற்படி நிகழ்வில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் மாவட்ட சம்மேளன பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் இரண்டு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் இந்த ஒன்று கூடலில் அனைவருடைய ஏகோபித்த தெரிவில் செல்வன் ஜோசப் நயன்(ஊடகவியலாளர்) மற்றும் செல்வன் K.யசோதரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு எதிர் வரும் காலங்களில் தேசிய ரீதியில் இளைஞர் சேவை மன்றதினால் நடைபெற இருக்கின்ற வேலை திட்டங்களில் மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவபடுத்தி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.
2018 ம் ஆண்டிற்கான மன்னார் மாவட்ட தேசிய சம்மேளன உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு கடந்த கால சேவையின் பிரகாரம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராக இந்த 2018 ஆண்டு பதவி கலாகரன் யசோதரன் பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனமானது 30-12-2017 அன்று தலைமையகமான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மஹரகமவில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு நீண்ட காலத்துக்குப்பின் உயரிய பதவி கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது தற்போதைய சூழலில் மன்னார் இளைஞ்ர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும் ஆகும்.
இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராக K.யசோதரனும் தேசிய சம்மேளன பிரதிநிதியாக J.நயனும் தெரிவு
Reviewed by Author
on
January 09, 2018
Rating:

No comments:
Post a Comment