தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி விபத்து: 16 பேர் உடல் கருகி பலி -
ருவாண்டாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஒன்றில் இயங்கி வரும் ஏழாவது நாள் அட்வெண்டிஸ்ட் தேவாலயத்திலே மின்னல் தாக்கியுள்ளது.
ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 14 பேர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளனர். 140 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 16 என உயர்ந்துள்ளது.
காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முதலுதவிக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி விபத்து: 16 பேர் உடல் கருகி பலி -
Reviewed by Author
on
March 12, 2018
Rating:

No comments:
Post a Comment