அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பகுதியில் கடற்படையினர் திடீர் சோதனை......


இந்தியாவில் இருந்து அதிக அளவில் போதை பொருட்கள் மன்னார் மாவட்த்தின் பேசாலை தலைமன்னார் பகுதிகளை இருந்து கடத்தப்படுவதை  தொடர்ந்து.கடந்த ஞாயிற்றுக் கிழமை (25.06.2018) குறித்த சோதனை பேசாலை சோலை  கடற்பரப்பில் நடைபெற்றுள்ளது.

மன்னார் பேசாலை கடலில்  இலுவைப்படகுகள் தொழிலுக்கு சென்று வந்தபின் இவ் பகுதியில் நங்குரமிடப்பட்டு வருவது வழமையாகும்.

இந்த   இழுவைப்படகுகளிலேயே கடற்படையினர்  சோதனையிடும் நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படும் போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் இடமாக சில இழுவைப்படகுகள் பயன் படுத்தப்படுவதாக கடற்படையிருக்கு கிடைத்திருக்கும் இரகசிய தகவல்களை அடுத்தே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் பரிசோதனைக்கு கடற்டையினரின் கண்கானிப்புப் படகு, டோரா படகுகள், மற்றும் சிறிய ரகப் படகுகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன

ஞாயிற்றுக் கிழமை (25.06.2018) காலை தொடக்கம் அன்று மாலை வரையில் குறித்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அன்மையில் கொழும்பில் பெருந்தொகை கஞ்சா போதைப் பொருளுடன் பேசாலை வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து கடற்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமையாகவும் தெரிய வருகிறது.



மன்னார் பேசாலை பகுதியில் கடற்படையினர் திடீர் சோதனை...... Reviewed by Author on June 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.