அண்மைய செய்திகள்

recent
-

அபிவிருத்திக்காக கொடுக்கப்படுகின்ற நிதி திறந்த மனதுடன்-வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்


துறைசார்ந்த அமைச்சுக்கள் துறை சார்ந்த விடையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய அமைச்சுக்கள் தலையிடக்கூடாது. மாகாண சபைக்கான அபிவிருத்திக்காக கொடுக்கப்படுகின்ற நிதி திறந்த மனதுடன் தாராளமாக கொடுக்கப்பட வேண்டும் என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.
மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பயிர் செய்கைக்காகவும்,குடி நீருக்காகவும் எமது நண்ணீரை பாது காக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.
ஆகவே இயற்கையின் மூலம் கிடைக்கின்ற மழை நீரை சரியான முறையில் தேக்கி வைத்து அவற்றை எமது விவசாய நடவடிக்கைகளுக்காகவும், எதிர்கால சந்ததியினருடைய வாழ்க்கைக்காகவும் தேக்கி வைக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட இக்கட்டடத்தின் வரலாறு கூறும் போது 2015 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வருடம் முழுமையாக்கப்பட்டுள்ளது.மறைமுகமாக மாகாண சபையின் நிலையை காட்டுகின்றது. எல்லா மாகாண சபைகளினுடைய அமைச்சுக்களுக்கும் இது பொறுந்தும்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி என்பது எந்த அளவுக்கு எங்களுக்கு கிடைக்கின்றது? எந்த அளவுக்கு எங்களுடைய அபிவிருத்தியிலே துரிதமாக செயல்படுத்துவதற்கு உதவுகின்றது என்பது தொடர்பில் இதுவும் ஒரு உதாரணம். மக்களினுடைய கேள்விகள் எங்கள் முன் விரிந்து நிற்கின்றது.
இவர்கள் என்ன செய்கின்றார்கள்?இவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் பின் நிலையில் இருக்கின்றது என்ற விமர்சனங்களை பார்க்கின்றோம். எங்களை பொறுத்தவரையில் மாகாண சபைக்கு தான் அபிவிருத்தி செய்வதற்கூறிய மூலதனங்கள் அல்லது நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள எவ்வளவு கஸ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றோம் என்பது தான் உண்மை.
எங்களுடைய அரசியல் கட்டமைப்பிலே அரசியல் இலாபங்களுக்காகவும், கட்சிகளினுடைய முன்னேற்றங்களுக்காகவும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்லாத அமைச்சிகளினூடாக பகிரப்படுகின்றது.
துறை சார்ந்த அமைச்சுக்கள் தமது துறை சார்ந்த விடையங்களை அபிவிருத்தி செய்வதை இலங்கையிலே கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துறை சார்ந்த அமைச்சுக்கள் துறை சார்ந்த விடையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய அமைச்சுக்கள் தலையிடக்கூடாது.

மாகாண சபைக்கான அபிவிருத்திக்காக கொடுக்கப்படுகின்ற நிதி திறந்த மனதோடு தாராளமாக கொடுக்கப்பட வேண்டும்.கிடைக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்த வழிவகுத்து கொடுக்கப்பட வேண்டும்.
மக்களின் முறைப்பாடுகள், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கின்ற போது நாங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரே ஒரு விடை இது உங்கள் அதிகார வரம்பிற்கு உற்பட்டது இல்லை.
மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறான நிகழ்வகளில் எங்களினுடைய ஆதங்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எமது கடமை. மக்கள் இதனை புறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்திக்காக கொடுக்கப்படுகின்ற நிதி திறந்த மனதுடன்-வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் Reviewed by Author on August 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.