மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு -
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் கலந்து கொண்டு இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையுடன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகம், மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கம், WTBF இன் இலங்கை கிளையும் இணைந்து நடத்த உள்ள தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி முகாமும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினமும் குறித்த பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சியினை WTBFஇன் (கனடா ) ஆரம்பகால உறுப்பினரும் பயிற்சியாளருமாகிய ஜெயகாந்த், WTBF ன் இலங்கை கிளையின் தலைவரும், வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்சியாளருமாகிய கமலன் ஆகியோர் இணைந்து பயிற்சிகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே பாஸ்கரன், பிரதி ஆணையாளர் நா. தஞ்சயன், வீதிப் போக்குவரத்து பொறியியலாளர் சசிநந்தன், நிர்வாக உத்தியோகஸ்தர் ரோகினி மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு -
Reviewed by Author
on
September 07, 2018
Rating:

No comments:
Post a Comment