அண்மைய செய்திகள்

recent
-

யூதர்கள் அனைவரும் சாகட்டும்: வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கொலைவெறித் தாக்குதல்.. 8 பேர் பலி -


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது. தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யூதர்கள் அனைவரும் சாகட்டும் என கத்திக் கொண்டே துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது அந்த வழிபாட்டு தலத்தில் 40 முதல் 50 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே துப்பாக்கியால் சுட்டநபர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.
பிட்ஸ்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






யூதர்கள் அனைவரும் சாகட்டும்: வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கொலைவெறித் தாக்குதல்.. 8 பேர் பலி - Reviewed by Author on October 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.