அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளி வரும்- சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ


மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளி வரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (30) 135 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த 22 ஆம் திகதி நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் இருந்து 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம காணப்பட்ட நிலையில் அவற்றில் 294 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறு நாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.

என்னுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இரு சட்டத்தரணிகளும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக பணிப்பாளர் ஒருவரும் வருகை தந்திருந்தனர்.

அங்கே மனித எலும்புக்கூடுகளின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் இரு வாரங்களில் எமக்கு கிடைக்கும். எமது அகழ்வு பணிகள் தொடரும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளி வரும்- சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ Reviewed by Author on January 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.