புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சாதனை படைத்தது இந்தியா -
2014 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 2,226 புலிகளே காணப்பட்டன.
அத்துடன் இவை விரைவாக அழிவடைந்து வரத்தொடங்கின.
இதனால் அழிவடைந்துவரும் புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 2,967 ஐ எட்டியிருந்தது.
இவ் அதிகரிப்பின் காரணமாக இந்திய சூழல் சமநிலை சிறந்த முறையில் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் காணப்படுகின்றது.
மேலும் எதிர்பார்த்ததை விடவும் குறுகிய காலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு செய்தது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சாதனை படைத்தது இந்தியா -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:

No comments:
Post a Comment