தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-படம்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு,மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று திங்கட்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த 6 மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை 29-07-2019குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த 6 மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை 29-07-2019குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு-படம்
Reviewed by Author
on
July 30, 2019
Rating:

No comments:
Post a Comment