அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-கஞ்சா உடமையில் வைத்திருந்த நபருக்கு அபராதம்

அனுமதியின்றி சட்டபூர்வற்றமுறையில் தன் உடமையில் கஞ்சா என்ற போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டதுடன் சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா ஒரு குற்றவாளிக்கு உத்தரவுட்டார்.


தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சட்டபூர்வமற்ற முறையில் தன்
உடமையில் 1630 மில்லி கிராம் கஞ்சா என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டி பொலிசார் மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை (23.08.2019) இவ் வழக்கு மன்னார் நீதவான்
நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது அவ் நபர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.

நீதிபதி குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் மூன்று
மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.
அத்துடன் சட்டபூர்வமற்ற முறையில் 410 மில்லி கிராம் கஞ்சா என்ற போதைப்
பொருளை தன் உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரையும் பொலிசார் அன்றைய  தினம் இதே மன்றில் ஆஐர்படுத்தியபோது இவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இருவரின் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் விசாரனைக்காக 17.10.2019 தவணையிடப்பட்டுள்ளதுடன் அன்றையத் தினம் கிராம அலுவலகரின் கடிதம் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மன்னார்-கஞ்சா உடமையில் வைத்திருந்த நபருக்கு அபராதம் Reviewed by Author on August 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.