தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மாணவர்கள்,சாதனையாளர்கள் கௌரவிப்பும்-படங்கள்
மன்னாரில் மாணவர்களின் கல்வியிலும், சாதனையாளர்களை ஊக்குவிப்பதிலும் அக்கறைக்கொண்டு செயல்படும் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடப்பு வருடத்தில் (2019) நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு அரசாங்க புலமைப் பரிசு பரீட்சையில் மன்னார் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மடு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் 196 மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் இயக்குனர் கலைச்செம்மல் கவிஞர் வை.கஜேந்திரன் B.A. அவர்களின் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் 03.11.2019 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்விழாவில் 19 சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை மாணவ மாணவிகளின் வாத்தியை இசையோடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த்தாய்வாழ்த்திசைக்க இவ் நிகழ்வு ஆரம்பத்தில் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகராக இருந்து அண்மையில் இறைவனடி சேர்ந்த அமரர் ஆயுள்வேத வைத்தியகலாநிதி தேசபந்து தேசகீர்த்தி தேசாபிமானி S.லோகநாதனின் BSMS,JP அவர்களின் உருவப்படத்துக்கு அவரின் புத்திரரால் தீபமேற்றி மாலை அணிவிக்கப்பட சபையோர் அஞ்சலியும் செலுத்திய நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி க.சிவசம்பு, சிறப்பு விருந்தினர்களாக மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் M.Y.மாஹிர், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் (FSC), மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை அதிபர் T.தனேஸ்வரன் உட்பட மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியகலாநிதி M.கதிர்காமநாதன், சட்டத்தரணி S.டினேஷன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் J.நயன் அவர்கள் தொகுத்து வழங்க மாலை விழா இனிதே நிறைவுற்றது.
மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் இயக்குனர் கலைச்செம்மல் கவிஞர் வை.கஜேந்திரன் B.A. அவர்களின் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் 03.11.2019 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இவ்விழாவில் 19 சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை மாணவ மாணவிகளின் வாத்தியை இசையோடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த்தாய்வாழ்த்திசைக்க இவ் நிகழ்வு ஆரம்பத்தில் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகராக இருந்து அண்மையில் இறைவனடி சேர்ந்த அமரர் ஆயுள்வேத வைத்தியகலாநிதி தேசபந்து தேசகீர்த்தி தேசாபிமானி S.லோகநாதனின் BSMS,JP அவர்களின் உருவப்படத்துக்கு அவரின் புத்திரரால் தீபமேற்றி மாலை அணிவிக்கப்பட சபையோர் அஞ்சலியும் செலுத்திய நிகழ்வும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி க.சிவசம்பு, சிறப்பு விருந்தினர்களாக மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் M.Y.மாஹிர், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் (FSC), மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை அதிபர் T.தனேஸ்வரன் உட்பட மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியகலாநிதி M.கதிர்காமநாதன், சட்டத்தரணி S.டினேஷன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் J.நயன் அவர்கள் தொகுத்து வழங்க மாலை விழா இனிதே நிறைவுற்றது.
தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மாணவர்கள்,சாதனையாளர்கள் கௌரவிப்பும்-படங்கள்
Reviewed by Author
on
November 09, 2019
Rating:

No comments:
Post a Comment