முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்க வேண்டுமா அழகு குறிப்புகள் -
அதில் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழியும். இதனால் பலரும் கோடைக்காலங்களில் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு.
முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அந்தவகையில் தற்போது எண்ணெய் வழியும் பிரச்சனை கொண்டவர்கள் தங்கள் சருமத்தை எப்படி பாதுக்காக்கலாம் என இங்கு பார்ப்போம்.

- வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.
- சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிர் வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் படையைக் கட்டுப்படுத்தும்.
- கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்ற இருக்கும்.
- வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.
- தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்க வேண்டுமா அழகு குறிப்புகள் -
Reviewed by Author
on
February 18, 2020
Rating:
No comments:
Post a Comment